‘எம்மை குற்றம்சாட்டியவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்’ – சிறிலங்கா இராணுவத் தளபதி

மன்னார் புதைகுழி விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் சிறிலங்கா இராணுவத்தைக் குற்றம்சாட்ட முனைந்தவர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னார் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எலும்புக்கூடுகள் பல நூற்றாண்டுகள் பழைமையானவை என்று தெரியவந்ததை அடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

“மன்னார் புதைகுழிக்கு சிறிலங்கா இராணுவமே பொறுப்பு என்று அனைத்துலக சமூகத்திடம் கூறுவதற்கு பலரும் தயங்கவில்லை.

எல்லாவற்றுக்கும் சிறிலங்கா இராணுவம் மீது குற்றம்சாட்டுகின்ற ஒரு வழக்கம் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

அனைத்து தரப்பினரும், ஏனையவர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு முன்னதாக, விசாரணைகளை நடத்தி, சாட்சியங்களைப் பெற்று உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!