பொள்ளாச்சி விவகாரத்தில் திடீர் திருப்பம்: திருநாவுகரசு தாயாரின் பகீர் வாக்குமூலம்..!

இந்தியா, தமிழகத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில் அடுத்தடுத்து உண்மைகள் வெளிவந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக கூறப்பட்டுவரும், பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்காரசின் தாய் பிரபல ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் “தனது மகன் எந்த தப்பும் செய்யவில்லை” என்று உறுதியாக குறிப்பிடுள்ளார்.

குறித்த பேட்டியில் திருநாவுக்காரசின் தாயார் கூறுவதாவது, என் மகன் காரில் விபத்துக்குள்ளாகி தலையில் அடிப்பட்டு 3 மாதங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தான். நானே அவனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டேன்.

“நான் ஒன்னும் தப்பானவ கிடையாது, என் மகனை நான் தப்பானவான வளர்க்கவில்லலை, எல்லோரும் பளிபோட்டு 8 நாட்கள் வைத்து இருந்து அடித்து செல்போனின் வீடியோ ஏத்தி என் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என நினைத்து இதை செய்துள்ளார்கள் என ஆணைத்தரமாக தெரிவித்துள்ளார்.

மேலும் வீடியோவில் இருப்பது அனைத்து பொய், என் மகன் வீடியோவில் ஒரு வீடியோவிலாவது இருக்கின்றனா?பரமகுரு என்பவர் ஆள் வைத்து பணம் கொடுத்து ரோட்டில் திரியும் வேறு ஒரு பெண்ணை கூட்டி வந்து வீடியோவில் பேச வைத்துள்ளார்கள். இது அனைத்துமே பொய்.

எனது உயிருக்கும் என் கணவன் உயிருக்கும் எனது மகளுக்கு உயிருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். என் பிள்ளைக்கு ஏதாவது ஆகிவிட்டது என்றால் நானும் மண்ணென்ணெய் ஊற்றி தற்கொலை பண்ணிவிடுவேன் ”என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

மேலும் இது அரசியல்வாதிகளில் சதியாக இருக்கும் என திருநாவுக்கரசின் அம்மா பேட்டியளித்துள்ளமை அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!