ஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு

நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதியை சிறிலங்கா புதுப்பித்துக் கொண்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவு வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

”நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதியை சிறிலங்கா புதுப்பித்துக் கொண்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.

இந்தப் பிரச்சினைகளை தீர்க்க சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், அனைத்து இலங்கையர்களுக்கும் அமைதியான, செழிப்பான எதிர்காலத்தையும் பெற முடியும்” என்று அந்த கீச்சகப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!