நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு விவகாரத்தில் மீண்டும் நழுவல் போக்கிலான அரசியல் கட்சிகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புத் தொடர்பில் சாதகமான கருத்துக்களை அண்மைக்காலத்தில் வெளியிட்டு வந்த நாட்டின் மூன்று முக்கிய தலைவர்களும் தற்போது அந்த விடயத்தில் ஒரு நழுவல் போக்கைக் கடைப்பிடிப்பதாகத் தெரிகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே இன்னமும் தனது நிலைப்பாடாக இருப்பதுடன் அதனைச் செய்ய வேண்டியது பாராளுமன்றத்தின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பிறகு அந்த விடயம் தொடர்பாக அவரிடமிருந்து எந்தவொரு உறுதியான கருத்தும் வெளிவராத அதேவேளை எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைக்கக்கூடிய கூட்டணியின் சார்பிலான ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதில் அவர் அக்கறை காட்டிக்கொண்டிருக்கின்றார்.

இதேவேளை ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டுமென்று பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மத்தியில் கடந்த மாதம் கோரிய மஹிந்த ராஜபக்ஷவும் பிறகு அது தொடர்பில் உறுதியான கருத்துக்களை வெளியிட முன்வருவதாக இல்லை. என அரசியல் அவதானிகள் பலரும் கருத்துவெளியிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!