பயங்கரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கை : டெல்லி, மும்பை, கோவாவில் அதிகபட்ச பாதுகாப்பு!

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற எச்சரிக்கையை அடுத்து டெல்லி, மும்பை, கோவாவின் சில பகுதிகளில் உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் 2 மசூதிகளில் புகுந்து அங்கிருந்தவர்களைக் கொன்றதற்கு பழி தீர்க்கும் வகையில் பதிலடித் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள யூதர்கள் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வழக்கமான துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற ஆயுதங்களின்றி கார், லாரியைக் கொண்டு மோதச் செய்தல், கத்தியால் தாக்குதல் உள்ளிட்ட வகையில் தாக்குதலை அரங்கேற்ற வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மும்பையில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!