அமெரிக்க படையினரின் வான்வழித்தாக்குதல்:ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 குழந்தைகள் பலியாகி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில்,ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள குண்டுஸ் தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது.

இந்தப் பகுதியில் அமெரிக்கப் படைகள் கடந்த 30 மணி நேரத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 குழந்தைகள் உட்பட மொத்தம் 13 பேர் கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அங்கு அதிகளவிலான குழந்தைகள் இறப்பு அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!