சொத்துக்களை சூறையாடிய 3 ஜனாதிபதிகள்!

நாட்டின் மூன்று ஜனாதிபதிகள் மக்கள் சொத்துக்களை சூறையாடியுள்ளனர் என்றும் ஆதாரங்களை வெளியிட தயாரெனவும் ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.

அரசியல் மேடைகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறும்போது, அவரின் பின்னால் பின்னர் மஹிந்தானந்த அழுத்கமகே, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக மோசடி வழக்குகள் உள்ளன.

எனவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஊழல் ஒழிப்பு பற்றி பேசும் தகுதி இல்லை, மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே ஊழல் இல்லாத கட்சி .

ஜனாதிபதி, பிரதமர் என்ற பதவிகள் ஊழல் மோசடிகளுக்கான அனுமதி பத்திரமாகும். அமைச்சு பதவிகள் மக்கள் சொத்துகளை சூறையாடுவதற்கான அனுமதி பத்திரம் , முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன உள்ளிட்ட மூவரும் மக்கள் ​சொத்துகளை சூறையாடியுள்ளனர் எனவும் சாடினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!