வன்கொடுமைக்குட்படுத்தி, துடி துடித்து உயிர் விட்ட சிறுமி: கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலத்தால் அதிர்ச்சியில் பொலிஸார்..!

இந்தியா, தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோவையைச் சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், குற்றவாளியென கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார், அடுக்கடுக்காக பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

அதாவது, கடந்த மாதம் 25 ஆம் திகதி சிறுமி அவரது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது வீட்டுக்கு வரும்படி அழைத்தேன். ஆனால் சிறுமி அங்கிருந்து ஓடிச்சென்றபோது அவளை விரட்டிபிடித்தேன்.

கீழே விழுந்ததில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டதையடுத்து எனது வீட்டுக்கு பலவந்தமாக தூக்கிசென்றேன். இதனை அருகில் இருப்பவர்கள் யாரும் கவனிக்கவில்லை.

மேலும், எனது பாட்டி இறக்கும் தருவாயில் படுத்த படுக்கையில் இருந்தார். எனது வீட்டின் உள் அறைக்குள் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தேன். இதன்போது சிறுமி சத்தம்போட்டதால் தலையில் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

இதற்கிடையில், எனது பாட்டி இறந்துவிட்டார். இதனால் சிறுமியின் உடலை வீட்டுக்குள் மறைத்துவைத்துவிட்டேன். எனது பாட்டியின் இறப்புக்கு உறவினர்கள் வந்த காரணத்தால், சிறுமியின் பெற்றோர் எங்கள் வீட்டை கண்டுகொள்ளவில்லை.

எனது பாட்டியின் இறுதி சடங்கு முடிந்தவுடன் சிறுமியின் உடலை வெளியே தூக்கிவீசிவிட்டு தப்பித்துவிட்டேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமாரை ஏப்ரல் 15 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!