கணவனால் மனைவிக்கு நேர்ந்தது என்ன?

நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியின் தலையை மொட்டையடித்து ஆடையை அவிழ்த்து, கணவர் ஒருவர் சித்தரவதை செய்த கொடூர சம்பவம் அண்மையில் ஏற்பட்டுள்ளது.

அஸ்மா ஆஸிஸ் பாகிஸ்தான் லாகூரை சேர்ந்த மியான் பைசல்-க்கும் கடந்த சில அவருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஆஸிஸ் பரபரப்பு காணொளி ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த காணொளி பதிவில், அந்த பெண் மொட்டையடிக்கப்பட்ட தலையுடனும், களையிழந்த முகத்துடனும் பரிதாபமாக பேசியுள்ளார்.

அதில், கணவர் மற்றும் அவரது நண்பர்களின் முன்னிலையில் நடனம் ஆட மறுத்ததற்காக தன்னை கணவர் துன்புறுத்தியதாக காணொளியில் ஆஸிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் என்னுடைய ஆடைகளை வீட்டு பணியாளர் முன் அகற்றி, அவரைக் கொண்டு என்னை பிடிக்கவைத்து தலை முடியை ஷேவ் செய்து பின்னர் அதை தீயிட்டு கொழுத்தியதாக கணவர் மீது ஆஸிஸ் புகார் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் புகாரளித்தும் பொலிஸார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆஸிஸின் கணவர் மற்றும் வீட்டு பணியாளர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டை பைசல் முழுமையாக மறுத்துள்ளார். பொய்யான சூழலை உருவாக்கி அதனை பயன்படுத்தி தன்னை சிக்க வைத்துள்ளதாக பைசல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!