விஜியின் கையிலி்ருந்த இரத்தமும், தோலும்: உயிருக்கு போராடிய கடைசி நிமிடம் நடந்தது என்ன?

இந்தியா, திருத்தணியில் தனியாக இருந்த விஜி மற்றும் அவரின் மகன் கொலை வழக்கில் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த வெங்கட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விஜியின் நகத்திலிருந்த வெங்கட்டின் இரத்தத் துளிகள், தோல்தான் துப்புதுலங்க முக்கிய ஆதாரமாக இருந்தது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8-ம் திகதி, வீட்டில் தனியாக இருந்த விஜியும், மகனும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் நகத்தில் இரத்தம், தோல் இருந்தன. அந்த இரத்தத்தை ஆய்வு செய்தபோது, அது பெண்ணின் இரத்தம் இல்லை என்பது தெரியவந்தது.

இதனால் விஜியை கொலை செய்த நபரின் இரத்தமாக இருக்கலாம் என விசாரணை தொடரப்பட்டதில், விஜியின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த வெங்கட் என்பர் மீது சந்தேகம் ஏற்பட்டு நடத்தப்பட்ட விசாரணையிலும் மேலும் அவரது இரத்தமாதிரியை சோதனை செய்து பார்த்ததிலும் அது வெங்கட்டின் இரத்தம் என உறுதிசெய்யப்பட்டது.

வெங்கட்டிடம் இருந்து தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடிய விஜி, அவரது கழுத்தில் கீறியபோது இரத்தங்கள் அவரது நகத்தில் படிந்துள்ளது.

வெங்கட்டுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமணச் செலவுக்காக விஜியின் வீட்டுக்கு திருட சென்ற இடத்தில் இரட்டை கொலையை செய்தது தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!