மின்னல் தாக்கி வீடு எரிந்தது! – வெளியில் சென்றதால் தப்பிய குடும்பத்தினர்!

மன்னார்- மாந்தை மேற்கு வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது மின்னல் தாக்கியுள்ளது. சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. எனினும், தென்னை மரங்கள் மற்றும் வீடும், மின் சாதனப் பொருட்கள், உடைகள் என்பன தீக்கிரையாகின. வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பியதும் நிலமையை அவதானித்து அதிர்ச்சியடைந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!