தாயின் குதிச் செருப்பு குழந்தைக்கு எமனானது!!

மாடிப்படியில் நடந்து வந்த போது, குதிச் செருப்பால் நிலை தடுமாறி தாயின் கையில் இருந்து தவறி கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் தானே மாவட்டம் உல்லாஸ்நகர் தோபிகாட் பகுதியில் நடந்துள்ளது. சேர்ந்தவர் சேக். கல்யாண், ராம்பாக் பகுதியில் நடந்த உறவினரின் திருமணத்துக்குச் சென்ற பெண், திருமணம் முடிந்து குழந்தையுடன் 2- ஆவது மாடியில் இருந்து படியில் இறங்கி கீழே வந்து கொண்டு இருந்தார்.

அவர் அணிந்து இருந்த குதிச்செருப்பால் படியில் நிலை தடுமாறினார். அப்போது அவர் கையில் இருந்த குழந்தை தவறி 2- ஆவது மாடியில் இருந்து முதல் தளத்தில் விழுந்து படுகாயமடைந்தது.

திருமண வீட்டில் இருந்தவர்கள் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினார்.

தாயின் கையில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!