சினிமாவை போல் அரங்கேறிய அவலம்: – மசாஜ் சென்டரில் கத்திமுனையில் 2 இளம்பெண்கள் பலாத்காரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, அனுமந்தபாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ரேகா(27). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வரும் ரேகா, சேலம் புதிய பஸ் நிலையம் அருகே சினிமா நகரில் கடந்த 20 நாட்களுக்கு முன் புதிதாக மசாஜ் சென்டர் தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி மாலை, இவரது மசாஜ் சென்டருக்கு ஒரு கார் மற்றும் 3 பைக்குகளில் 10 பேர் வந்தனர். திபுதிபுவென உள்ளே நுழைந்தவர்கள் உள்பக்கம் கதவை பூட்டிவிட்டு, அங்கிருந்த ரேகா மற்றும் ஊழியரான 21 வயது இளம்பெண் ஆகிய இருவரையும் கத்திமுனையில் மிரட்டி, ரூ15 ஆயிரத்தை பறித்துள்ளனர்.

பின்னர், இருவரையும் தனித்தனி அறைக்குள் இழுத்துச்சென்று கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டிய அவர்கள், கார் மற்றும் பைக்கில் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு பின்னர், அதாவது நேற்று முன்தினம் மாலை, பாதிக்கப்பட்ட மசாஜ் சென்டர் உரிமையாளர் ரேகா, பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, சேலம் ஜான்சன்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடியான எலும்பன் கார்த்திக்(36), அவனது கூட்டாளிகளான ரவுடி பாலகிருஷ்ணன், விஜயகுமார், விக்னேஷ், அசார் உள்ளிட்ட 10 பேர் என தெரியவந்தது. இதில், ரவுடி எலும்பன் கார்த்திக், விஜயகுமார்(27), விக்னேஷ்(23) ஆகிய 3 பேரை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் 2 மசாஜ் சென்டரில் கொள்ளையடித்ததாக புகார் இதே ரவுடிக்கும்பல் கடந்த 4ம் தேதி, சேலம் காந்தி ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரில் புகுந்து பெண்களையும், காவலாளியையும் மிரட்டி பணம் மற்றும் நகையை பறித்துச் சென்றுள்ளனர். மேலும், நேற்று முன்தினம் அழகாபுரம் தோப்புக்காடு பகுதியில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்று அங்கிருந்த 2 பெண்கள், உரிமையாளர் அரவிந்த் சதீஷ் (23) ஆகியோரை மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்றுள்ளனர். இதுபற்றிய புகாரின் பேரில், அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!