பள்ளிவாசலில் மீட்கப்பட்ட வாள்கள் ; கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கைது !

கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தாஜுதீன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொம்பனித்தெரு பள்ளிவாசல் ஒன்றில் இருந்து 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்பிலேயே கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தாஜுதீனை கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்பில் அவரது உறவினர் மற்றும் மௌலவி ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துளளனர்.

கொம்பனித்தெரு பள்ளிவாசல் ஒன்றில் இருந்து நேற்றையதினம் சோதனை நடவடிக்கையின் போது 46 வள்களும் இராணுவ சீருடையும் மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொலிஸார் குறித்த வாள்களை என்ன நோக்கத்திற்காக பள்ளிவாசலில் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்தமை தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!