சஹ்ரானின் சகோதரி, கணவன் கைது – தீவிர விசாரணை!

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவரான முஹமட் சஹ்ரான் காசீமின் சகோதரி நேற்று மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். புதிய காத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் உள்ள அவரது வீட்டிலேயே முஹமட் சஹ்ரான் காசீமின் சகோதரியான முகமது காசீம் மதனியா – (25வயது) கைது செய்யப்பட் டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரின் வீட்டில் இருந்து 20 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். முஹமட் சஹ்ரான் காசீமின் குடும்ப உறுப்பினர்கள் சாய்ந்தமருதில் நடந்த மோதலில் கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில் காத்தான்குடியிலிருந்த ஒரு சகோதரியை படையினர் நேற்று கைது செய்தனர். அத்தோடு இவரின் கணவரான மொஹமட் நியாஸ் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரால் கடந்த மாதம் 29 திகதி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். இவர்கள் இருவரிடமும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய் வுப்பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!