குடிபோதையில் தொல்லை செய்த கணவனை கொலை செய்து சாக்கடையில் வீசிய மனைவி!

புதுவையில் குடித்துவிட்டு தொல்லை செய்து வந்த கணவனை கொலை செய்து சாக்குப்பையில் கட்டி, சாக்கடையில் வீசிய பெண், அவரது சகோதரி, சகோதரியின் ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர். முதலியார்பேட்டை மேம்பாலம் அருகிலுள்ள கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட ஆண் சடலத்தை திங்கட்கிழமை போலீசார் மீட்டனர். இறந்துகிடந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கமலக்கண்ணன் என்பது விசாரணையில் தெரியவந்தது. குடிக்கு அடிமையான கமலக்கண்ணன், போதையில் அடிக்கடி மனைவி ஸ்டெல்லாவிடம் தகராறில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வழக்கம்போல் குடிபோதையில் தகராறு செய்த கணவனை பிடித்துத் தள்ளியுள்ளார் ஸ்டெல்லா. அப்போது சுவற்றில் மோதி கமலக்கண்ணன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து தனது சகோதரி ஜெரினா, ஜெரினாவின் ஆண் நண்பர் தமிழ்மணி ஆகியோரின் உதவியுடன் கமலக்கண்ணனை சாக்குப்பையில் கட்டி, கழிவுநீர் வாய்க்காலில் வீசியதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!