பதவியை பெரிதாக நினைத்திருந்தால் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருப்போம்- தமிழ்ச்செல்வன் அதிரடி.

பதவியை பெரிதாக நினைத்திருந்தால் தி.மு.க.வுடன் பகிரங்கமாக கூட்டணி வைத்திருப்போம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“ தமிழகத்தில் ஊழல் ஆட்சியை கலைக்க சட்டப்பேரவையில் வாக்களிப்போம். அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தி.மு.க.வுடன் சேர்ந்து வாக்களித்தவர் துணை முதல்வர் ஓ.பி.எஸ். டி.டி.வி. தினகரன் தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும். பதவியை பெரிதாக நினைத்திருந்தால் தி.மு.க.வுடன் பகிரங்கமாக கூட்டணி வைத்திருப்போம்.” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!