கட்டிலுக்குள் கீழ் பதுங்குகுழி அமைத்து தங்கியிருந்த 3 பேர் கைது!

பதுளை-பொகம்பர பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வீடொன்றிலிருந்து சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் குறித்த வீட்டினை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டின் ஒரு அறையினுள் நிலத்தின் கீழ் சுரங்கம் அமைத்து அந்த பகுதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சுரங்கத்திற்குள் பதுங்கியிருந்த மூன்று பயங்கரவாதிகள் உட்பட 5 பேரை இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!