எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 3 இந்தியர்கள் பலி!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் ஏறி வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களில் மட்டும் 3 இந்தியர்கள் எவெரஸ்ட் சிகரத்தில் ஏறும்போது உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 2 பேர், புதன்கிழமையன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தின் 8,485 மீட்டர் உயரத்தில் ஏறிக் கொண்டிருந்த நாராயண் சிங் என்பவர் வியாழன் அன்று தவறி விழுந்து உயிரிழந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!