பணத்துக்காக கொல்லப்பட்ட தம்பியின் மனைவி!!

பணத்துக்காக சொந்த சகோதரனின் மனைவியையே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மேலாளவந்தசேரி கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஜோசப் ராஜசேகருக்கும், எஸ்தருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

ராஜசேகர் சிங்கப்பூரில் தொழில் செய்து வந்தார். அவரின் மனைவி எஸ்தர், தனது குழந்தையுடன் தனிமையில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு உறவினர்கள் சென்ற போது எஸ்தர் அங்கு இல்லை. மாறாக நெல்சனும், எஸ்தரின் குழந்தையும் மட்டுமே இருந்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் இதுபற்றி ராஜசேகருக்குத் தகவல் அளித்தனர்.

உடனடியாக, சிங்கப்பூரிலிருந்து வந்த ராஜசேகர் தனது மனைவியை காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். ராஜசேகரின் அண்ணன் நெல்சனிடம் பொலிஸாரிடம் விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். எனவே, அவரிடம பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், எஸ்தரை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

திருமணத்திற்கு முன் தனது தம்பி ராஜசேகர் சிங்கப்பூரிலிருந்து பணத்தை தனக்கு அனுப்பி வந்ததாகவும், திருமணத்திற்கு பின் எஸ்தருக்கே அனுப்பி வருவதால், அது பிடிக்காமல் எஸ்தரைக் கொலை அவர் கொலை செய்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் எஸ்தரின் உடலை கைப்பற்றினர். நெல்சனை கைது செய்த பொலிஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!