சீனாவில் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை கடத்தல்!

சீனாவில் பட்டப்பகலில் 3 வயது குழந்தையைக் கடத்திய இளைஞனை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து தாக்கினர். குவாங்டாங் ((Guangdong)) மாகாணத்தில் 3 வயது குழந்தை தனது சகோதரனுடன் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் அந்தக் குழந்தையைக் கடத்திச் சென்றான். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகின.

இதையடுத்து டோங்குவான் ((Dongguan)) என்ற இடத்தில் மறைந்திருந்த அந்த இளைஞனை பொதுமக்கள் கண்டறிந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இறுதியில் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த இளைஞன் பெயர் லியூ என்பதும், குழந்தையின் தந்தையுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடத்தியதும் தெரியவந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!