அரியானா மாநிலத்தில் பெண்ணை சுற்றி வளைத்து தாக்கிய போலீசார்!

அரியானா மாநிலத்தில் போலீசார் ஒரு பெண்ணை சுற்றி வளைத்து தாக்கியது தொடர்பான வீடியோ இணையதளத்தில் பரவிய நிலையில் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரிதாபாத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் தொடர்புடைய பெண் புகார் அளிக்காததால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததாக ஹரியானா போலீசார் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து மாநில மகளிர் ஆணையம் காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து தொடர்புடைய தலைமைக் காவலர்களான பல்தேவ், ரோகித், காவல் சிறப்பு அதிகாரிகள் கிரிஷண், ஹர்பால், தினேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!