மகிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனம் – மைத்திரி நிராகரிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் பாவனைக்காக, குண்டுதுளைக்காத வாகனத்தைக் கொள்வனவு செய்யும் யோசனைக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தின் கோரிக்கைக்கு அமைய, மகிந்த ராஜபக்சவின் பாவனைக்காக, குண்டுதுளைக்காத வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்தவாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார்.

எனினும், இந்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!