மாத்தறை விகாரைகளும் மங்கள சமரவீரவுக்கு கதவடைப்பு!

அமைச்சர் மங்கள சமரவீரவை மாத்தறை மாவட்டத்தில் எந்த விகாரைகளுக்கும் அழைப்பதில்லை என மாத்தறை பௌத்தசாசன சங்கம் தீர்மானித்துள்ளது.அத்துடன், அவர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளை தவிர்ப்பதற்கும் அந்த சங்கம் தீர்மானித்துள்ளது.

அதேவேளை, நேற்று மாலை 3.30 மணியளவில் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளில் 150க்கும் மேற்பட்ட பிக்குமார் கலந்து கொண்டிருந்தனர்.இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாத்தறையில் சில பகுதிகளில் கடையடைப்புகளும் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரட்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோருக்கு கம்பஹா பிரதேசத்திலுள்ள எந்தவொரு விகாரையிலும் வழிபாட்டில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!