கொழும்பு வரும் மோடி சம்பந்தனையும் சந்திக்கிறார்!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசவுள்ளார். இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோக்கலே இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக, நரேந்திர மோடி அண்மையில் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், நாளை மறுநாள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களை சந்தித்து பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோக்கலே தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!