சினமன் கிரான்ட் குண்டுதாரி ஒரு ‘கொள்கலன்’ திருடர்!

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் இன்சாப் அஹமட் என்பவருக்கு எதிராக, 2013 ஆம் ஆண்டு திருட்டு தொடர்பான வழக்கொன்றை பொலிஸார் தாக்கல் செய்துள்ளதாக தெரியவந்திருக்கிறது. அந்த வழக்கை கிராண்ட்பாஸ் பொலிஸார் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

62 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலுமினியம் , பித்தளை மற்றும் இரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலே இந்த வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி மீண்டும் தொடரப்பட்ட போது இன்சாப் அஹமட் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகியதாகவும் மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!