குடும்பத்தினர் கண்முன்னாலேயே 12 வயது சிறுமி கற்பழிப்பு! – உத்தரபிரதேசத்தில் கொடூரம்.

உத்தரபிரதேசத்தில் குடும்பத்தினர் கண்முன்னாலேயே 12 வயது தலித் சிறுமி, 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கும், பாலியல் வன்செயலில் ஈடுபட்டவர்களுக்கும் கழிவுநீர்க்கால்வாய் அமைப்பதில் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமியை இழுத்து சென்றபோது தடுக்க முயன்ற குடும்பத்தினரை, அடித்து உதைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!