சுதந்திரத்தின் பின்னர் இலங்கை இரத்த பூமியாக மாறியுள்ளது – பேராயர் கவலை

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை இரத்த பூமியாக மாறியுள்ளது. இதே நிலைமை தொடருமானால் நாடு நீண்ட நாட்களுக்கு நிலைத்திக்காது என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஊழல், மோசடிகள் இல்லாத இடம் இல்லை. சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவரும் சட்டத்தை மீறுவதற்கு பழக்கப்பட்டுள்ளனர். சுதந்திரத்தின் பின்னர் இலங்கை இரத்த பூமியாகவே உள்ளது. இதற்கான காரணம் இலங்கை அரசியலில் காணப்படும் ஒழுக்கமின்னையாகும். எனவே அரசியல்வாதிகள் தான் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். ஆரம்பப்பிரிவு மாணவர்களிடம் ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதில் பயனில்லை.

அக்மீமன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!