இராணுவ வேலையும் ஓர் அரச வேலைதான். எனவே வடக்கு இளைஞர்களும் இராணுவத்தில் இணைந்து இந்த நாட்டுக்குச் சேவையாற்ற முன்வரவேண்டும்.
இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
சிங்கள டிப்ளோமாக் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று இராணுவக் கட்டளைத் தளபதியின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள். நல்லவர்கள். எனினும் கடந்த 30 வருடப் போர் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்றுப் பிரித்து விட்டது.
தெற்குச் சிங்கள மக்கள் வடக்குத் தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். 30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வடக்
கில் மின்சாரம் இல்லாத நிலையில்கூட வடக்கிலிருந்து சிறந்த மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உருவாகியிருந்தார்கள். தற்போதைய இளைஞர் யுவதிகளுக்கும் நான் ஒன்றைக் கூறவிரும்புகின்றேன்.
இராணுவத்தைச் சிங்கள இராணுவம் என எண்ணாதீர்கள் இராணுவ வேலையும் ஓர் அரச வேலைதான் என்றார். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!