கோத்தா போட்டியிட எந்த தடையும் இல்லை – கம்மன்பில

வரும் அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதற்கு, எந்த தடையும் இல்லை என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

“கோத்தாபய ராஜபக்ச எந்தப் பிரச்சினையும் இன்றி அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். அமெரிக்க குடியுரிமையைத் துறக்கின்ற ஆவணங்களை அவர் பெற்றுக் கொண்டு விட்டார்.

எனவே, அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அமெரிக்க குடியுரிமை விவகாரத்தினால் எந்தப் பிரச்சினையும் வராது” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!