பிரபாகரனால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் இறைமை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த வரையில் இலங்கையின் இறைமை பேணி பாதுகாக்கப்பட்டதாக வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த மண்ணில் இருக்கும் வரை தமிழீழத்தின் இறைமை மட்டுமல்ல இலங்கையுடைய இறைமையும் பேணி பாதுகாக்கப்பட்டிருந்தது. யாராலும் இலங்கையை வசப்படுத்த முடியாமல் இருந்தது, இலங்கையின் வளங்கள் பாதுகாக்கப்பட்டது.

எனினும், இன்று மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் இலங்கையில் தலைதூக்கியுள்ளன. நீயா? நானா என்று போட்டி போட்டுக் கொண்டு மேற்குலக நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் தங்களுடைய ஆதிக்கத்தை கொண்டு வந்துள்ளார்கள்.இந்த நிலைமை இலங்கையின் இறைமையை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!