அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னா் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் விசேட வா்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 22 ஆம் திகதி வரை அவசரகால சட்டம் அமுலில் இருந்தது, அதன் காலம் நிறைவடைந்து மீண்டும் குறித்த அவரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. அது இன்று ஜூன் மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு அவசரகாலச் சட்டத்தை நீடித்து இன்றைய தினம் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று தொடக்கம் அவரகால சட்டத்தை ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!