தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க ஜனாதிபதியும் அழைக்கப்படுவார்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அழைப்பு விடுக்கப்படும் என அந்தக் குழுவின் உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியையும் இந்த தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்க அழைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே அவருக்கும் அழைப்பு விடுவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!