அரசு மருத்துவமனை வார்டில் பணியின் போது டிக் டாக் வீடியோ – 4 அரசு செவிலியர்கள் சஸ்பெண்ட்!

ஒடிசாவில் டிக் டாக் வீடியோவால் செவிலியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மருத்துவ உதவியாளர்கள் இருவர் டிக் டாக்கில் பதிவேற்றிய நடன வீடியோ மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி. (SCB) என்ற அரசு மருத்துவமனையில் ஆர்த்தோபெடிக் வார்டில் நோயாளிகள் பின்புறமிருக்க, மருத்துவ உதவியாளர்களாகப் பணிபுரியும் பெண்கள் டிக் டாக் வீடியோ எடுத்தனர்.

அது வைரலானதை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இதே போன்று அரசு மருத்துவமனை செவிலியர்கள் 4 பேர் பணி நேரத்தில் நடனமாடி மருத்துவமனைக்குள் சீருடையோடு டிக் டாக் வீடியோ எடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!