மூதாட்டியின் கழுத்தை மரத்தில் கட்டிய பணிப்பெண்!

சீனாவில் சக்கர நாற்காலியில் அமரவைக்கப்பட்டிருந்த மூதாட்டியை கழுத்தோடு சேர்த்து மரத்தில் கட்டி வைத்துச் செல்ல முயன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். நன்யுவான் என்ற இடத்தில் பெண் ஒருவர், சக்கர நாற்காலியில் அழைத்து வந்த மூதாட்டியை கழுத்தோடு சேர்த்து மரத்தில் கட்டிக் கொண்டிருந்தார்.

அவ்வழியே சென்ற ஒருவர் இதுகுறித்து கேட்ட போது, தான் மூதாட்டியைப் பார்த்துக் கொள்ள வந்த பணிப்பெண் என்றும், தன் வீட்டில் அவசர வேலை ஒன்றிருப்பதால் இவரை மரத்தில் கட்டி வைத்துவிட்டு செல்வதாகவும் கூறினார். பாதசாரி வாதாடியபோது,தன் மகளும் இதுபோன்றே செய்வார் என்றும் இது ஒரு பொருட்டே அல்ல என்பது போலும் பதிலளித்து பின் மூதாட்டியை அங்கிருந்து அழைத்துச் சென்றார். இதுகுறித்து பாதசாரி எடுத்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!