மது அருந்திய ஏர் இந்தியா விமானி: சோதனையில் சிக்கினார்!

ஆல்கஹால் தொடர்பான சுவாசப் பரிசோதனையில் தோல்வியுற்ற விமானியை ஏர் இந்தியா நிறுவனம் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகமிருந்ததால் விமானி ஒருவர் கூடுதலாக காக்பிட் பணிக்குழுவில் சேர அழைக்கப்பட்டார்.

அப்போது விமானம் புறப்படுவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய சுவாசப் பரிசோதனையில் அவரது மூச்சுக்காற்றில் ஆல்கஹால் அளவு அதிகமிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு 3 மாத பணியிடை நீக்கம் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

மது போதையோடு விமானத்தை இயக்கும் போது விபத்து ஏற்படுவதைத் தடுக்க விமானிகளுக்கு சுவாசப் பரிசோதனை செய்யப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!