திரு­மண வைபவத்­தி­லி­ருந்து திரும்பிய வேன்: மணமக்களுடன் 10 பேரின் உயிரிற்கு எமனான புகையிரதம்

வட­மேற்கு பங்­க­ளா­தேஷில் திரு­மண வைபத்­தி­லி­ருந்து வீட்­டிற்குத் திரும்பிக் கொண்­டி­ருந்­த­வர்­களை ஏற்றிச் சென்ற வேனொன்று புகை­யி­ர­தத்தால் மோதுண்டு விபத்­துக்­குள்­ளா­னதில் மண­மகன் மற்றும் மண­மகள் உட்­பட குறைந்­தது 10 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­தி கள் தெரி­விக்­கின்­றன.

தலை­ந­க­ரி­லி­ருந்து சுமார் 145 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள உலஹ்­பரா பிராந்­தி­யத் தில் பாது­காப்­பற்ற புகை­யி­ரதக் கட­வை­யொன்றை அந்த வேன் கடக்க முயற்­சித்த போது டாக்கா நகரை நோக்கிப் பய­ணித்த புகை­யி­ர­தத்தால் மோதுண்டு விபத்­துக்­குள்­ளா­ன­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். விபத்து இடம்­பெற்ற போது அந்த வேனில் 14 பேர் இருந்­துள்­ளனர்.

இந்த விபத்தில் மண­மகன் மற்றும் மண­மகள் உட்­பட 8 பேர் சம்­பவ இடத்­தி­லேயும் இருவர் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பல­ன­ளிக்­காத நிலை­யிலும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

பங்­க­ளா­தேஷில் பாது­காப்­பற்ற புகை­யி­ரதக் கட­வைகள் கார­ண­மாக புகை­யி­ரத விபத்­துகள் இடம்­பெ­று­வது வழ­மை­யா­க­வுள்­ளது. அந்­நாட்­டி­லுள்ள சுமார் 2,500 புகை­யி­ரதக் கட­வை­களில் சுமார் 40 சத­வீ­த­மா­னவை பாது­காப்­பற்­ற­வை­யாகும்.

கடந்த ஆறரை வருட காலப் பகு­தியில் அந்நாட்டின் 2,800 கிலோமீற்றர் புகையிரதப் பாதை வலைப்பின்னலில் இடம்பெற்ற விபத்துகளில் சுமார் 6,000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரி விக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!