கொக்குளாயில் அத்துமீறும் தென்னிலங்கை மீனவர்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் கடற்பகுதியில் அத்துமீறி சட்ட விரோத மீன்பிடித் தொழிலில் தென்னிலங்கை மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனை முல்லைத்தீவுக்குச் சென்றுள்ள வடக்கு மாகாண சபையினர் நேரில் கண்டனர்.

வடக்கு மாகாண சபையினரைக் கண்டு சிறுதும் அச்சப்படாத தென்னிலங்கை மீனவர்கள் வழமையான தமது தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!