இரண்டாவது முறை இராணுவத் தளபதியை விசாரணைக்கு அழைக்கும் தெரிவுக்குழு

SRI LANKA-POLITICS
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை இரண்டாவது தடவையாகவும் விசாரணைக்கு அழைத்துள்ளது.

தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு வரும் 31ஆம் நாள் – புதன்கிழமை காலை இடம்பெறவுள்ளது. அன்றைய நாளே சிறிலங்கா இராணுவத் தளபதியை முன்னிலையாகும்படி தெரிவுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்னவையும் நாளை மறுநாள் சாட்சியமளிக்க முன்னிலையாகும்படி, தெரிவுக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!