சீனாவை தாக்கிய லெகிமா புயல்: 30 பேர் உயிரிழப்பு!

சீனாவை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய லெகிமா புயலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த லெகிமா புயல் ஷெஜியான் மாகாணத்தை தாக்கியது. அப்போது மணிக்கு 187 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதோடு, கனமழையும் கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவு, கட்டிட விபத்துகள் ஏற்பட்டன.

ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. புயலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக சீன செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் மாயமான 18 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!