மட்டக்களப்பில் பதற்றம் – 4 பேர் காயம்!

மட்டக்களப்பு – கல்வியங்காடு இந்து மயானத்தில் தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாங்கள் புதைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பகுதி மக்கள் நேற்று நடத்திய போராட்டத்தில் பொலிசார் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான இளைஞர்கள் நேற்று மாலை வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை தமது பிரதேசத்தில் புதைக்க வேண்டாம் என தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறிய போதிலும், அதனை பொருட்படுத்தாது பொலிஸார் அந்த உடற்பாகங்களை நேற்று இந்து மயானத்தில் புதைத்துள்ளதாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்திகொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்துள்ள போராட்டங்கள் முன்னெடுத்தனர். குறித்த பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட அதேவேளை பெரும் பதற்றநிலை தோன்றியது.

இதனால் அங்கு அதிகளவான படையினரும் பொலிசாரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயர்களை எரித்தனர். இதனால் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசி பொலிசார் கலைத்தனர். இதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!