மின்னல் தாக்குதலில் இருந்து தப்பியவர், மூடநம்பிக்கை சிகிச்சையால் உயிரிழந்த சோகம்!

ஒடிசா மாநிலம் சுந்தர்கார்க் மாவட்டத்தில் உள்ள கிராமம் பமரா. இந்த கிராமத்தில் பினோத், கோகுலா போத் ஆகியோர் வசித்து வந்தனர். அவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மார்க்கெட் சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பும்போது இருவரையும் மின்னல் தாக்கியது. இதனால் இருவரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அவர்களை கிராமத்தினர் மீட்டனர். ஆனால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. அதில் ஒருவரான பினோத்தை குழி தோண்டி அதில் வைத்து, சாணத்தால் மூடி வைத்தனர்.

சிறிது நேரத்தில் பினோத் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் கோகுலா போத்-ஐ அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நாகரீக காலத்தில் மருத்துவம் முன்னேறிய போதிலும் இதுபோன்ற மூடநம்பிக்கையால் வாலிபர் உயிர் பரிபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!