அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூறாவளிகளை அணுகுண்டுகளை வீசித் தடுக்க அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக செய்தி வெளியாகி பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில் அதனை பொய் செய்தி என டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார்.
பிரான்ஸில் இடம்பெற்ற ஜி–7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு விட்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு வெள்ளை மாளிகைக்கு திரும்பிய நிலையில் டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“பிரான்ஸில் மிகவும் வெற்றிகர மாக அமைந்த ஜி–7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு விட்டு சிறிது முன்னரே நாடு திரும்பிய நிலையில் சூறாவளிகள் எமது கட ற்கரையை வந்தடையும் முன்னர் அவற்றை அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி தகர்க்க நான் விரும்புவதாக போலியாக புனையப்பட்ட பொய்யான செய்தியை மட்டுமே நான் காண நேர்ந்தது” என ட்ரம்ப் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“இது மிகவும் கேலிக்குரிய ஒரு போதும் நடைபெறமுடியாத ஒன்றாகும்” என அவர் கூறினார். அக்ஸியஸ் இணையத்தளத்தில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட இந்த செய்தியை அமெரிக்க ஊடகங்கள் மட்டுமல் லாது சர்வதேச ஊடகங்கள் பலவும் மீள வெளியிட்டிருந்தன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!