வேட்பாளரை தீர்மானித்த பின்னரே கூட்டணி!

ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானித்த பின்னரே, கூட்டமைப்பு தொடர்பாக கைச்சாத்திடும் நிகழ்வில் பங்கேற்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அந்த கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையைத் தீர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்றுமுன்தினம் சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம். ஓரிரு நாட்களில் மேற்கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளார். தேர்தலை எதிர்நோக்குவதற்கு மக்களிடையே பிரபல்யமடைந்த, மக்கள் கோருகின்ற சிறந்த வேட்பாளரை முன்நிறுத்த வேண்டும். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியே அந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!