ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் இதுவரை எனக்கு அறிவித்தல் இல்லை – அஜித் பி பெரேரா

ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் இதுவரை எனக்கு அறிவித்தல் கிடைக்கவில்லை.கட்சியின் வெற்றிக்காக செயற்பட்டது கட்சியின் ஒழுக்கத்தை மீறும் செயலென கருதி எனக்கு தண்டனை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றேன் என டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கட்சியின் யாப்பு ஒழுக்க விதிமுறைகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சர்களான அஜித் பி பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக விடுத்திருந்த அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.