பச்சிளம் குழந்தையை எட்டி உதைத்த கொடூரன்!

ஒரு வயது பெண் குழந்தையை காலால் எட்டி உதைத்துச் செல்லும் கொடூரனை சீன போலீசார் தேடி வருகின்றனர். 57 வயதான பாட்டி தன் ஒரு வயது பேத்தியை அழைத்துக் கொண்டு ஷென்ஸென் மாகாணத்தில் உள்ள ஸிங்செங் ஷாப்பிங் மாலில் கடந்த புதன் கிழமை வந்திருந்தார். குழந்தை தூண் ஒன்றின் அருகே உலவிக் கொண்டிருந்த நிலையில் பாட்டி அவரைக் கண்காணித்து வந்தார். அப்போது திடீரென அவ்வழியே சென்ற கொடூரன் ஒருவன், ஒரு வினாடி நின்று குழந்தையை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிச் சென்றான்.

பாட்டி ஓடிச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவனை எச்சரித்த நிலையில், அவன் மிரட்டல் விடுத்துச் சென்றதாக பெற்றோர் புகார் அளித்தனர். இதில் குழந்தை லேசான காயமடைந்தது. சந்தேகத்துக்கு இடமான அவனை அடையாளம் கண்டுள்ளதாகவும் விரைவில் கைது செய்வதாகவும் ஷென்ஸென் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!