வைத்தியர் சிவரூபன் மட்டக்களப்புக்கு!

பளையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் சிவரூபனை பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் மட்டக்களப்பிற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத விசாரணை பிரிவில் விசாரணை செய்யப்பட்டு வந்த வைத்தியர் சிவரூபன், கூறிய தகவல்களின் அடிப்படையில் ஆயுதங்கள் பல மீட்கப்பட்டன. வேறு சிலர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது அவரை மட்டக்களப்பிற்கு கொண்டு சென்றுள்ளதால், அங்கும் கைதுகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!