ஒக்ரோபர் 11இல் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்ரோபர் 11ஆம் நாள் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினால், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நடைபெறவில்லை.

இந்த தேர்தலை உடனடியாக நடத்துமாறு உச்சநீதிமன்றம் கடந்தவாரம் உத்தரவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!