துபாயில் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த பாலியல் தொழிலாளி!

துபாயில் பாலியல் தொழிலாளி வீட்டு மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் இதில் தொடர்புடைய மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உஸ்பிகிஸ்தான் நாட்டை சேர்ந்த மூன்று இளைஞர்கள் பாலியல் தொழிலாளியை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அவருடன் மூவரும் உறவு கொண்ட பின்னர், பண விடயத்தில் பெண்ணுடன் மூவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கோபமடைந்த மூவரும் பாலியல் தொழிலாளியை அடித்ததோடு அவரை ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளனர். மேலும், அவரின் பணத்தையும் மூவரும் சேர்ந்து திருடியுள்ளனர்.

பின்னர் அறை பால்கனி மூலம் அப்பெண் தப்பிக்க முயன்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து மூவரையும் கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி மூவருக்கும் தலா இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தண்டனை காலத்துக்கு பின்னர் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!