நண்பரை காப்பாற்ற சென்று உயிரை விட்ட இந்திய மாணவன் ..!

அமெரிக்காவில், நீரில் மூழ்கிய தனது நண்பரை காப்பாற்றுவதற்காக டர்னர் அருவியின் கீழ் உள்ள நீர்ப்பரப்பில் குதித்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த கோயலமுடி அஜய் குமார் என்ற இளைஞர் அமெரிக்காவின் அர்லிங்டன் நகரில் இருக்கும் டெக்சாஸ் பல்கலைக் கழத்தில் பயின்று வந்தார். இவர் தனது நண்பருடன் இணைந்து ஒக்லஹோமாவில் இருக்கும் டர்னர் அருவிக்கு கடந்த செவ்வாய் அன்று சென்றுள்ளார்.

அவரது நண்பர் அருவிக்கு கீழ் உள்ள நீர்பரப்பில் நீச்சலடிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் மூழ்கியதையடுத்து அவரை காப்பாற்ற குதித்த அஜய்யும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், அஜய்யின் சடலம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!